Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீதர் வாண்டையார் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

ஜனவரி 27, 2021 08:46

கும்பகோணம்: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை பெயரை சுட்ட வேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்குலத்தோர் இன மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், கள்ளர் அகமுடையார் மறவர் ஆகிய இனங்களை தேவர் இனத்துடன் சேர்க்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கையை வலியுறுத்தி மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அசூர் புறவழிச்சாலையில் உள்ள தேவர் சிலை உள்ளே தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொதுச்செயலாளர் செல்வராஜ், இளைஞரணி மாவட்ட தலைவர் செல்வபாண்டியன் மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் சுகுமாரன், அருமை துரை, ஒன்றிய தலைவர் சுரேந்திரன், நகர செயலாளர் சோழா உள்ளிட்ட ஏராளமானோர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்